9th New Tamil Book chapter 1.3 தமிழ்விடு தூது

9th New Tamil Book chapter 1.3 தமிழ்விடு தூது
: :
தமிழ்விடு-தூது (9th New Tamil Book)
1. "தித்திக்கும் தெள்அமுதாயத் தெள்அமுதின் மேலான முத்திக் கனியேஎன் முத்தமிழே"என்ற பாடல் வரி இடம்பெற்றுள்ள நூல்? தமிழ்விடு தூது
2. "வந்துஎன்றும் சிந்தா மணியாய் இருந்தஉனைச் சிந்துஎன்று சொல்லிய நாச்சிந்துமே"என்ற பாடல்வரி இடம் பெற்றுள்ள நூல்? தமிழ்விடு தூது
3. தமிழ்விடு தூது ஆசிரியர் யார்? பெயர் தெரியவில்லை
4. குறம், பள்ளு என்பதன் பொருள் என்ன? சிற்றிலக்கிய வகைகள்
5. மூன்றினம் என்பது? துறை, தாழிசை, விருத்தம்
6. திறமெல்லாம் என்பதன் பொருள் என்ன? சிறப்பெல்லாம்
7. சிந்தாமணி என்பதன் பொருள் என்ன? சிதறாத மணி (சீவகசிந்தாமணி)
8. சிந்து என்பதன் பொருள் என்ன? ஒருவகை இசைப்பாடல்
9. அமைதி, மேன்மை ஆகியவற்றைக் சுட்டும் குணம் எவை? சத்துவம்
10. சோம்பல், தாழ்மை போன்றவற்றைக் குறிக்கும் குணம்? தாமசம்
11. போர், தீவிரமான செயல்களை குறிக்கும் குணம்? இராசசம்
12. ஊனரசம் என்பதன் பொருள் என்ன? குறையுடைய சுவை
13. தமிழையே தூது ஆக்கிய நூல்? தமிழ் விடு தூது
14. இரண்டு கண்களைப்போல் இரண்டிரண்டு பூக்களை வைத்து தொடுக்கப்படும் மாலைக்கு ----- என்று பெயர்? கன்னி
15. தமிழ்ல் இரண்டிரண்டு அடிகள் கொண்ட எதுகையல் தொடுக்கப்படும் செய்யுள் வகை ----- ஆகும்? கண்ணி
16. தேவர்களுடைய மூன்று குணங்கள் எவை? சத்துவம், இராசசம், தாமசம்
17. மனிதரால் உண்டாக்கப்பட்ட வண்ணங்கள் எத்தனை? 5 (வெண்மை, கருமை, செம்மை, பொம்மை, பசுமை)
18. தமிழ் மொழி தூங்கிசை வண்ணம் முதலாக, இடைமெல்லிசை வண்ணம் ஈறாக ----- வண்ணங்களை கொண்டுள்ளது? நூறு
19. சுவை எத்தனை வகைப்படும்? 6
20. செவிக்கு விருந்தளிக்கும் தமிழ் மொழி எத்தனை சுவைகளை பெற்றுள்ளது? 9 சுவை (வீரம், அச்சம், இழிப்பு, வியப்பு, காமம், அவலம், கோபம், நகை, சமநிலை
21. தமிழ் மொழிக்கு அழகுகள் எத்தனை? 8 (அம்மை, அழகு, தொன்மை, தோல், விருந்து, இயைபு, புலன், இழைபு)
22. முத்திக்கனி இலக்கணக்குறிப்பு தருக? உருவகம்
23. தெள்ளமுது இலக்கணகுறிப்பு தருக? பண்புத்தொகை
24. குற்றமிலா இலக்கணக்குறிப்பு தருக? ஈறுகெட்ட எதிர்மறை பெயர்ரெச்சம்
25. நா இலக்கணக்குறிப்பு தருக? ஓரெழுத்து ஒருமொழி
26. செவிகள் உணவான இலக்கணக்குறிப்பு தருக? நான்காம் வேற்றுமைத்தொகை
27. சிந்தா மணி இலக்கணக்குறிப்பு தருக? ஈறுகெட்ட எதிர்மறை பெயரெச்சம்
28. வாயில் இலக்கியம், சந்து இலக்கியம் என்னும் பெயர்களில் அழைக்கப்படுவது? தமிழ்விடு தூது
29. தூது எவ்வகை இலக்கியம்? சிற்றிலக்கியம்
30. தூது அனுப்பும் பொருட்களின் எண்ணிக்கை? பத்து
31. தமிழ்விடு தூது எக்கடவுளை தலைவனாக கொண்டு பாடப்பட்டது? மதுரையில் கோவில் கொண்டிருக்கும் சொக்கநாதர்
32. தமிழ்விடு தூது எந்த வெண்பாவால் இயற்றப்பட்டது? கலிவெண்பா
33. தமிழ்விடு தூது எத்தனை கண்ணிகளை கொண்டுள்ளது? 268
34. தமிழ் விடு தூது வை யார் புதுப்பித்த ஆண்டு? உ. வே. சா
35. தமிழ்விடு தூதுவை உ. வே. சா புதுப்பித்த ஆண்டு? 1930ஆண்டு
36. தமிழ் விடு தூதுவில் யார் மீது பெண் காதல் கொள்கிறாள்? மதுரையில் வீற்றிருக்கும் சொக்கநாதர் மீது
37. "காதொலிரும் குண்டலமும் கைக்கு வளையாபதியும் கருணை மார்பின் மீதொளிர் சிந்தாமணியும் என்ற பாடலை இயற்றியவர் யார்? கவியோகி சுத்தானந்த பாரதியார்